பாரீஸ் முழுவதும் மூட்டைப்பூச்சி.. தொல்லை தாங்காமல் தவிக்கும் மக்கள்

பொதுப்போக்குவரத்து, ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் பரவலான மூட்டைப்பூச்சி தொல்லையால் போராடி வருகிறது பாரீஸ். 2024 கோடைகால ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இந்த மூட்டைப்பூச்சி பிரச்னை பாரிஸ் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கோடை காலத்தில் பாரிஸ் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் சிறிய அளவிலான மூட்டைப்பூச்சிகள் கண்டறியப்பட்டது. பின்னர் திரையரங்குகளில் காணப்பட்டன. சமீபத்திய நாட்களில், தேசிய அதிவேக ரயில்கள் மற்றும் பாரிஸ் மெட்ரோ இரண்டிலும் மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்வதாக அறிக்கைகள் வந்துள்ளன.

2024 ஒலிம்பிக்ஸ் நெருங்கி வரும் நிலையில், துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர் உள்ளிட்ட நகர அதிகாரிகள், இந்த சிக்கலை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் Clement Beaune பொது போக்குவரத்தில் உள்ள பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

மூட்டைப் பூச்சி கடித்தல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. மூட்டைப் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை என்றாலும், அவற்றின் இருப்பு மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தின் மீதான கவலைகள் அதிகரித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here