ஈப்போ:
சட்டவிரோத சூதாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (அக்.6) தாமான் ஜாடியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
சட்டவிரோத சூதாட்டக் கும்பலைச் சேர்ந்தவர் என நம்பப்படும் சந்தேக நபர், இணைய சூதாட்டத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 13 இடங்களை சோதனை செய்தாகவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வளாகங்களில் தெனகா நேஷனல் பெர்ஹாட் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அவர் நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
ஜெலாபாங், தாமான் ஜாடி மற்றும் ஜெலாபாங் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள மொத்தம் 23 வளாகங்களில் கடந்த வாரம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி யஹாயா தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் 300 க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியதாக ஏசிபி யஹாயா கூறினார்.
“இது ஒரு கடுமையான குற்றம் என்பதால் மக்கள் நிறுத்த வேண்டும், அத்தோடு இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்துவோம் என்று அவர் கூறினார்.