கோலாலம்பூர்:
நேற்று ஜாலான் கெனாங்காவைச் சுற்றி கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL ) மேற்கொண்ட நடவடிக்கையில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்ட 44 வணிக வளாகங்கள் உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
Ops Bersepadu (TEBAH) நடவடிக்கை மூலம், உள்ளூராட்சி மனற சட்டம் 1976 இன் பிரிவு 101(1)(v) இன் கீழ் இவை மூடப்பட்டது.
இவை உரிமம் இல்லாமல் வணிகம் நடத்துதல், வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறுதல் தொடர்பான குற்றங்களை உள்ளடக்கியது. இதற்கு மொத்தம் 51 அபராதங்கள் விதிக்கப்பட்டன என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.