வங்காளதேசத்தில் பிரதமரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்

டாக்கா:

ங்காளதேசத்தில் அந்த நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று சனிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டவாறு சென்றனர்.

இன்று சனிக்கிழமை பேரணியில் முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேசத்தில் தேசியவாதக் கட்சியும் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியுமான ஜமாத்-இ-இஸ்லாமியும் பங்கேற்றன.

அங்கு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அத்தோடு இதுவரை இல்லாத அளவுக்கு பேரணி பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here