கள்ள நோட்டு தயாரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

கோல திரெங்கானு :

கடந்தாண்டு முதல் கள்ள நோட்டு தயாரித்து, அதை பயன்படுத்தி வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை திரெங்கானு மாநிலப் போலீசார் முறியடித்துள்ளனர்.

கோல திரெகானுவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகத் திரெங்கானு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ மாஸில் மஸ்லான் கூறினார்.

கோல திரெங்கானுவிலுள்ள வாடகை வீடொன்றில் நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றும், 28, 33 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் சிலாங்கூர் மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறித்த கும்பல் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக கடைகளில் சிகரெட், stationeries , உணவு போன்ற விலை குறைந்த பொருள்களை வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்ட்தாக அவர் கூறினார்.

இக்கும்பலிடமிருந்து 27 கள்ள நோட்டுகள், இரு கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, கார், கள்ள நோட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட்தாக நம்பப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here