கோலாலம்பூர்:
சிலாங்கூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 174 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் இன்னும் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று, சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிலாங்கூரின் செப்பாங் மாவட்டத்தில் அதிகமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 498 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும் டெங்கில், தாமான் ஜெமிலாங், உலு லங்காட், உலு சிலாங்கூர், பெட்டாலிங்,கோம்பாக் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டத்தில் மொத்தம் 10 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.