ஜோகூர்:
ஜோகூரிலுள்ள அரசு மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து, மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மாலை 5.20 மணியளவில் நடந்ததாக தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
22 வயதான குறித்த நோயாளி கால் அறுவை சிகிச்சைக்காக, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், நோயாளிக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் அறுவை சிகிச்சை ரத்து செய்யப்பட்டது, மேலும் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
“முதற்கட்ட போலீஸ் விசாரணையில், இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.