Ops Ihsan: மனிதாபிமான உதவியின் இரண்டாம் கட்டம் எகிப்தை சென்றடைந்தது

புத்ராஜெயா:

ஒப்ஸ் இஹ்சானின் கீழ் பாலஸ்தீன மக்களுக்கான இரண்டாம் கட்ட மனிதாபிமான உதவி நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சிறப்பு சரக்கு விமானம் மூலம் அனுப் பப்பட்டது, உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணிக்கு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்தை சென்றடைந்தது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) உள்ள சரக்கு முனையத்தி லிருந்து புறப்பட்ட விமானம் மலேசியர்களிடமிருந்து 20 டன் நன்கொடைப் பொருட்களை ஏற்றிச் சென்றதாக மலேசிய மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண (MAHAR) தலைவரும், Ops Ihsan செயலகத் தலைவர் ஜிஸ்மி ஜோஹாரி தெரிவித்தார்.

இதுவரை மொத்தம் 40 டன் நன்கொடைப் பொருட்கள் பாலஸ்தீனியர்களுக்கு விநி யோகிக்க எகிப்துக்கு சென்றுள்ளன.

“40 டன் உதவியானது, ஒப்ஸ் இஹ்சான் மூலம் நன்கொடையாக அளிக்கப்பட்ட RM7 மில்லியன் மதிப்புள்ள மொத்த 50 டன் பொருட்களில் ஒரு பகுதியாகும், இதில் மருத் துவப் பொருட்கள், உணவு, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் போர் வைகள் போன்றவை அடங்கும்” என்று ஜிஸ்மி ஜோஹாரி தெரிவித்தார்.

ரஃபா எல்லைக் கடப்பு வழியாக காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்கான ஒரே செயல்படுத்தும் நிறுவனமாக இந்த உதவி எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.

எகிப்தின் RCS இன் பின்னூட்டத்தின் அடிப்படையில், இரண்டாவது ஏற்றுமதி மூலம் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் காஸா மக்களைச் சென்றடையும்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here