நெகிரி செம்பிலானில் உள்ள மேலும் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (நவம்பர் 23) போர்ட்டிக்சன் மற்றும் சிரம்பானில் இரண்டு சமீபத்திய வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும், எங்கள் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் எந்த வெடிபொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அச்சுறுத்தல்கள் புரளிகளாகக் கருதப்படுகின்றன என்று அவர் புதன்கிழமை (நவம்பர் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, Sekolah Tinggi Islam As-Sofaவிற்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு கணக்குகள் மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக டிசிபி அஹ்மத் ஜாஃபிர் தெரிவித்தார்.
குற்றவியல் மிரட்டல் குற்றவியல் சட்டம் பிரிவு 507 மற்றும் நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்றார்.























