கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 பேர் இன்னமும் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோத்தா பாரு:

ன்று காலை 9.45 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அங்குள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் 63 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.

18 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாசீர் பூத்தேவில் உள்ள SK வகாஃப் ராஜா மற்றும் ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள SK டோக் டே ஆகிய இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள கோலோக் ஆறு அபாயக் கட்டத்துக்கு கீழே குறைந்துள்ளது. என்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை (நவம்பர் 26) வரை கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய பகுதிகளில் கடுமையான கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here