ஜார்ஜ் டவுன்:
மாநில சட்டமன்றத்தின் இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் சமமான நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், பினாங்கு மாநில அரசாங்கம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், இது கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூஜ்ஜிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை விட இது சிறந்தது என்று முதல்வர் சௌ கோன் இயோவ் கூறினார்.
பெரிகாத்தானைச் சேர்ந்த பெனாகா சட்டமன்ற உறுப்பினர் முகமட் யூஸ்னி மாட் பியா, ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் RM500,000 ஒதுக்கீட்டை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மாநில சட்டமன்றத்தில் சோவுக்கு சவால் விடுத்தார்.
அதாவது “முன்னாள் முதல்வர் போலல்லாமல், எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கீட்டை அளிக்கும் அளவுக்கு முதல்வர் தைரியமாக இருக்கிறாரா?” என்று முகமட் யூஸ்னி கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாக “எதிர்க்கட்சிக்கான தற்போதைய ஒதுக்கீட்டைத் தக்கவைக்க நான் தைரியமாக இருக்கிறேன்” என்று சோவ் பதிலளித்தார்.