சீனாவைச் சுட்டெரிக்கும் வெயில்: பெய்ஜிங்கில் சிவப்பு எச்சரிக்கை

சீனாவின் தலைநகரா பெய்ஜிங்கில் சூரியன் சுட்டெரிப்பதால் அங்கு வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தலைநகரின் பெரும்பாலானபகுதிகளில் வெயில் 40 டிகிரி செல்சியஸ்வரை பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது. நேற்று வியாழக்கிழமை (ஜூன் 22) பிற்பகல் பதிவான 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே அந்நகரின் மிகவும் அதிகமான வெப்பநிலையாகும்.

சீனா நான்கு அடுக்கு வானிலை எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது. அந்த அடுக்கில் சிவப்பு நிறம் தீவிரமான எச்சரிக்கையைக் குறிக்கும். ஆரஞ்சு, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் எச்சரிக்கையில் அதனைப் பின்தொடர்ந்து வரும்.

அடுத்த எட்டு முதல் பத்து நாள்களுக்கு நாட்டின் வடப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று சீன வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று தெரிவித்தது.

மேலும், பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய், ஷாண்டோங், ஹெனான் போன்ற இடங்களின் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அம்மையம் தெரிவித்தது.

13 மில்லியனுக்குமேல் மக்கள்தொகை கொண்ட சீனாவின் வடதுறைமுக நகரமான தியான்ஜினில் வியாழக்கிழமை 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதேபோன்று வெயில் கொடுமை தொடர்ந்தால், அது மக்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. அதனால் தினமும் குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் வெளியில் செல்லும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறும் சீன அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here