கோலாலம்பூர்:
அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் புருனே உட்பட – 23 குறைந்த ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கு, பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் வரை இங்கு தங்குவதற்கு மலேசியா நீண்ட கால சமூக விசிட் பாஸ்களை வழங்குகிறது.
இந்த திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.
இந்த சிறப்பு அனுமதி மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பு, பயணம் மற்றும் நாட்டின் சட்டங்களின்படி அனுமதிக்கப்படும் வேலைத் துறைகளில் பகுதிநேர வேலை செய்ய உதவும் என்று சைபுதீன் நசுஷன் கூறினார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், , கத்தார், ஓமன், பஹ்ரைன், ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 23 குறைந்த ஆபத்து மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் குடிமக்களுக்கு இந்த திட்டம் திறக்கப்படும் என்றார்.
மலேசியாவின் புதிய விசா தாராளமயமாக்கல் திட்டத்திற்கான உள்துறை அமைச்சகத்தின் ஐந்து முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சைஃபுதின் நசுஷன் கூறினார்.