ஜாசின்:
வாகன ஓட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள், செல்லுபடியாகும் உரிமங்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் குறித்த தனது ஆலோசனைத் திட்டத்தை சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தொடர்ந்து வலுப்படுத்தும்.
லைசென்ஸ் இல்லாமல் பள்ளிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டும் மாணவர்கள் உட்பட 16 முதல் 35 வயதுக்குட்பட்ட 23,000 நபர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டதும் இதில் அடங்கும் என்று, அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோஸ்பியாகஸ் தாஹா கூறினார்.
அதே நேரத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு மோட்டார் சைக்கிள்களில் செல்ல வேண்டிய மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
“தங்கள் குழந்தைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டவோ அல்லது உரிமம் இல்லாமல் ஓட்டவோ அனுமதிக்கும் பெற்றோர் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என்று டத்தோ ரோஸ்பியாகஸ் கூறினார்.
ஒரு நேர்த்தியான சட்ட ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவது வாகனங்களை ஓட்டுவதற்கு சரியான உரிமம் தேவை என்ற பொது விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தற்போதைய புள்ளிவிவரங்களைக் குறைக்கவும் இது உதவும், பள்ளி மாணவர்களின் பங்கேற்பை உள்ளடக்கிய JPJ Cadet முகாம் போன்ற நிகழ்ச்சிகள் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நான்கு நாள் JPJ Cadet முகாமில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.