AI அடிப்படையிலான குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை தயாராகிறது – டத்தோஸ்ரீ ரம்லி

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்ட அமலாக்க முயற்சிகளில் காவல்துறை முன்னோக்கி செல்வது மிகவும் முக்கியமானது.

AI- அடிப்படையிலான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான காவல்துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கள் எதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு பணியாளர்களும் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் AI உடன், நாம் எதிர்கொள்ளும் எதிரி கண்ணுக்குத் தெரியாதவர், இது காவல்துறை முயற்சிகளை மிகவும் கடினமாகும் என்பதில் ஐயமில்லை” என்று, புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.

“எனவே, உலகெங்கிலும் உள்ள பிற சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் பயிற்சி மற்றும் அனைத்துலக ஒற்றுமையை பேணுவதற்காகவும் நாங்கள் அவ்வப்போது எங்கள் அதிகாரிகளை அனுப்புகிறோம். அத்தோடு தற்கால நவீன தொழிநுட்பங்களுடன் சார்ந்த எங்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான படிப்புகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்துடன் (UNODC) நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், நாட்டில் எதிர்காலத்தில் AI தொடர்பான குற்றங்களைச் சமாளிப்பதற்கான ஆதாரங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிகளில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா மற்றும் கமிஷன் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அரசாங்க அமைச்சகங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here