நாட்டில் ஊழல் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லை – பிரதமர்

ஊழலுக்கான சிறப்புக் குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ஊழலை எதிர்த்து நல்லாட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசின் முயற்சிகளின் தொடர்சியே இது என்றார்.

8.12.2023 அன்று புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியை பார்வையிட்ட பிறகு, அன்வார் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

“ஆட்சிதான் முக்கிய கவனம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர வேண்டும், கடந்த ஒரு வருடமாக, அரசாங்கத் தலைவர்களிடையே தவறான நடத்தை அல்லது ஊழல் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லை,” என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) இணையதளம் ஊடுருவல் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களைத் தடுக்க, இணையப் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here