கோலாலம்பூர்:
தனது சகோதரர் கோபிந்த் சிங் தியோ இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதை அறிந்த ராம்கர்பால் சிங், துணை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகினார்.
தானும் சகோதரரான கோபிந்தும் ஒரே நேரத்தில் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பணியாற்றுவது பொருத்தமானதல்ல என்று நம்பி, ராம்கர்பால் பதவியை துறந்தார் என்று DAP பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறினார்.
“சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை வரைவதில் ராம்கர்பாலின் பங்களிப்புக்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம், DAP பக்கச் சார்பற்றது என்று குற்றம் சாட்டுவதற்கோ அல்லது எந்த விமர்சகர்களுக்கோ இடமளிக்காமல் அவர் தனது பதவியை காலி செய்ய முடிவு செய்தார்” என்று, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லோக் கூறினார்.