கோத்தா பாரு:
பாசீர் மாஸில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இன்று காலை 9 மணி நிலவரப்படி 665 குடும்பங்களைச் சேர்ந்த 2,149 பேராகக் குறைந்துள்ளது.
நேற்றிரவு இந்த எண்ணிக்கை 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,316 பேராக இருந்தது என்று கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள ஒன்பது நிவாரண மையங்களிக் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.