13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 41 வயது ஆடவர் கைது

கோம்பாக்:

பத்துமலையிலுள்ள ஜாலான் லக்சமானாவில் 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 41 வயது ஆடவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடமிருந்து காவல்துறை புகாரைப் பெற்றதாக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் அரிபின் முகமட் நசீர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சந்தேகநபரின் வாடகை வீட்டில், பாதிக்கப்பட்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.

“பாதிக்கப்பட்டவர் நாசி லெமாக் வாங்கிவிட்டு தனியாக நடந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்தது.

“சந்தேக நபர் 41 வயதான உள்ளூர் மனிதர் என்றும், அவர் பாதிக்கப்பட்டவரை அணுகி, தனது மோட்டார் சைக்கிளில் செல்ல அழைத்தார், பின்னர் பாதிக்கப்பட்டவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த வீட்டிற்கு வந்தவுடன், சந்தேக நபர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், முடிந்ததும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு 20 ரிங்கிட் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்ய்கிறது.

பின்னர் அந்த சிறுவன் தனது வீட்டிற்கு ஓடிப்போய், தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொன்னார், மேலும் உடனே அவர்கள் போலீசில் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

“கோம்பாக்கிலுள்ள மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) கிடைத்த தகவலின் பேரில் நேற்று அதிகாலை 1.50 மணியளவில் சந்தேக நபரை கைது செய்தோம்,” என்று அவர் கூறினார்.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நேற்று முதல் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக நூர் அரிஃபின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here