ஆசியக் கோப்பை காற்பந்து போட்டி; இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

ஆசியக் கோப்பை காற்பந்து போட்டி தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

கண்டங்கள் அளவிலான அனைத்துலக காற்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5வது மிகப்பெரிய கால்பந்து போட்டி தொடராக உள்ளது ஆசியக் கோப்பை காற்பந்து தொடர்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடரில் ஆசிய கண்டத்தில் உள்ள 24 அணிகள் விளையாடுகின்றன. 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை காற்பந்து தொடர் நேற்று கத்தாரில் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் லெபனானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கத்தார் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 3 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

காற்பந்து போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதேநேரம், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியும் சமீப காலங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here