தொலைக்காட்சியில் செய்தி வாசித்து இதயங்களைக் கவர்ந்த பேரரசர் மற்றும் அரசியார்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் அரசியாரும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தி வாசித்ததைப் பார்த்து, மலேசியர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

மாமன்னர் அப்துல்லா அகமட் ஷாவும் அவரது துணைவியார் அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் நேற்று (ஜனவரி 17) TV 3 தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பப்பட்ட Bulletin Diraja நிகழ்வில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குச் செய்தி வாசித்தனர்.

இது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

செய்தி வாசித்தது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டுள்ளதுடன், மாமன்னருக்கும் அரசியாருக்கும் மலேசியர்களிடமிருந்து பாராட்டு மழை குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here