16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரரின் விளக்கமறியல் மேலும் ஒரு நாளுக்கு நீடிப்பு

பாரிட்:

டிவம் 4 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் சார்ஜென்ட் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் விளக்கமறியல் மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 376 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, 42 வயதான சந்தேக நபர் ஜனவரி 28 அன்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபரின் விளக்கமறியலை நாளை வரை நீட்டிக்க நீதிபதி அஸ்லின் ஜெட்டி ஜைனல் அபிதீன் இன்று அனுமதியளித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்தில்,பேராக் தெங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் பார்க்கிங் பகுதியிலும், காவல் நிலையத்தின் முன்பும், றித்த போலீஸ் சார்ஜெண்டால் 16 வயது மாணவி காருக்குள் வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடம் கூறியதையடுத்து, இந்தச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது என்று, மத்திய பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here