அமைதிக்கான நோபல் பரிசு; 4வது முறையாக டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான்காவது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்துள்ளார். இந்த சிறப்பு விருதுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

மத்திய கிழக்கில் கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் டிரம்ப் முக்கியப் பங்காற்றியதாக டென்னி தெரிவித்தார். இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் மத்திய கிழக்கில் கூடுதல் சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று பல ஆண்டுகளாக நிபுணர்களும், சர்வதேச அமைப்புகளும் பரிந்துரைத்து வருகின்றனர்.

ஆனால், அந்த வாதம் தவறு என்பதை டிரம்ப் நிரூபித்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அமைதி ஒப்பந்தங்களை உருவாக்க டிரம்ப் துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் அந்தமுயற்சிகளை அமைதிக்கான நோபல் பரிசுக்குழு அங்கீகரிக்கவில்லை. ஆனால் இந்த முறை சிறப்பு விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கிளாடியா டென்னி தெரிவித்தார்.

டிரம்ப் ஏற்கெனவே இந்த சிறப்பு விருதுக்கு பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் ஒரு முறை கூட விருதை வெல்லவில்லை. எனினும் இந்த முறையும் சிறப்பு விருதுக்காக அவரது பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here