கார் சாலையை விட்டு விலகி புதரில் மோதியதில் மோகனசுந்தரம் உயிரிழந்தார்

பாலிங்:

சுங்கை பட்டாணி – பாலிங் சாலையில் கம்போங் குபாங் பெர்டெங்குங் அருகே இன்று புரோத்தோன் சாகா வகைக் கார், சாலையை விட்டு விலகி புதரில் மோதியதில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதில் எம்.மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் சுங்கை பட்டாணியில் இருந்து கோலா கெட்டில், தாமன் ஓர்கிடில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார் என்று, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமட் கூறினார்.

“கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கத்தில் உள்ள புதரில் மோதியதாக நம்பப்படுகிறது.”

மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஷம்சுதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here