ஜோகூர் பாரு:
குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் கீழ் செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது அனுமதி இல்லாது நாட்டில் தங்கியிருத்தல் உட்பட பல்வேறு குடிநுழைவு குற்றங்களைச் செய்ததாக நம்பப்படும் 92 வெளிநாட்டினரை ஜோகூர் குடிநுழைவுத் துறை (JIM) கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுத்த அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய முதலாளிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, ஜோகூர் குடிவரவு இயக்குனர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
ஓப்ஸ் மாஹிர், ஓப்ஸ் செலேரா, ஓப்ஸ் சாபு ஆகிய நடவடிக்கைகள் மூலம் மாநிலம் முழுவதும் நேற்றும், நேற்று முன்தினமும் 17 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளூர் முதலாளிகள் 4 பேர் உட்பட மொத்தம் 54 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மலேசியாவில் வேலை செய்வதாகவும், வசிப்பதாகவும் நம்பப்படுவதுடன், உள்ளூர் முதலாளிகள் அவர்களைப் பாதுகாப்பதாகவும் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.