கோலாலம்பூர்:
ஜின்ஜாங், தாமான் பெரிங்கின், ஜாலான் மிரியில் உள்ள ஒரு பட்டறை இன்று காலை தீயில் எரிந்து நாசமானது.
அங்கிருந்த நான்கு கார்கள், ஒரு லோரி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமாகின.
குறித்த சம்பவம் தொடர்பில் கோலாலம்பூர் தீயணைப்பு செயல்பாட்டு மையத்திற்கு காலை 5.20 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே ஜின்ஜாங், மஞ்சலாரா மற்றும் செந்தூல் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 25 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று ,ஆபரேஷன்ஸ் கமாண்டர், முகமட் ஹஸ்புல்லா நைமி மஹ்மூட் கூறினார்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கார் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது, உடனே தீயயை அணைக்கும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு தீ பரவாமல் கட்டுப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அவ்வளாகம் 90 விழுக்காடு தீயில் நாசமானது என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.