கோலாலம்பூர்:
இன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, ஊழியர் ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் இரண்டாவது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் (PMO) அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்ற மேலவை தலைவரான டான்ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.