ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தோன்றி வருகிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து மிதமானது முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4:50 மணியளவில் ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here