கோலாலம்பூர்:
பூச்சோங் உத்தாமா தொழில்துறை பூங்காவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வாயுக்கசிவால்ற்ப் வெடிப்பு ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10.14 மணிக்கு (பிப்ரவரி 23) நிகழ்ந்த இந்த வெடிப்பு சம்பவம் அசிடிலீன் வாயுவின் அதிக செறிவால் ஏற்பட்டது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
“அந்த இடத்தில் காற்றோட்டத்தை வெளியேற்றும் முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன,” என்றும் , காயமடைந்தவர்களுக்கு உதவ மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.