தாவாவில் தீ விபத்து; 286 பேர் நிவாரண மையத்தில் தஞ்சம்

தாவாவ்:

ன்று காலை 8 மணி நிலவரப்படி, கம்போங் தஞ்சுங் பத்து லாவூட் லோக்போண்டில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 81 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 286 பேர், தாவாவ் விளையாட்டு வளாக பல்நோக்கு மண்டபத்தில் இயங்கும் தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“இந்த இரண்டு பிபிஎஸ்களும் நேற்றிரவு 8 மணிக்கு திறக்கப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று, சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JBPN) செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, மதியம் 2.30 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில், கம்போங் தஞ்சோங் பத்து லாட் லாக்பாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 45 வீடுகள் எரிந்து நாசமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here