சுங்கை பூலோ:
எராமின் 5 போதைப்பொருளை விற்பனை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
சபாக் பெர்னாம் பகுதியில் சாலையோரத்தில் 44 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் பாவித்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார்.
மனைவியை இழந்த அந்த ஆடவரிடமிருந்து RM145,000 மதிப்புள்ள 8,900 போதைப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
“குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பான முந்தைய 5 குற்றப்பதிவுகளை கொண்டிருப்பதாகவும், அவற்றில் இரண்டு வழக்கில் அவர் ஏற்கனவே தேடப்படுகிறார் என்றும் அவர் சொன்னார்.