நூர் சஜாத்தின் ஆடம்பர பங்களா மே 13 அன்று ஏலம் விடப்படும்

கோலாலம்பூர்:

லேசிய தொழிலதிபர் முஹமட் சஜாத் கமாரூஸ் ஜமான் அல்லது நூர் சஜாத்தின் ஆடம்பர பங்களா ஆரம்பவிலை RM4.68 மில்லியனுக்கு ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது.

பெட்டாலிங் ஜெயாவின் 10வது பிரிவில் அமைந்துள்ள இரண்டு மாடி பங்களா மே 13 அன்று ஏலம் விடப்படும் என்று ரியல் எஸ்டேட் முகவர் ஒருவரின் இடுகை மூலம் தெரியவந்துள்ளது.

“ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு, நூர் சஜாத் இந்த வீட்டை RM9 மில்லியனுக்கும் மேலாக விற்க விரும்பினார். ஆனால் இப்போது, அந்த வீடு வங்கியால் RM4.68 மில்லியனுக்கு ஏலம் விடப்படும்” என்று அந்த முகவர் கூறினார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடம் இருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here