கிள்ளானிலுள்ள பேரங்காடி ஒன்றில் 19 மாதக் குழந்தையை கடத்த முயன்ற வெளிநாட்டு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர்:

கிள்ளான் நகரில் உள்ள ஒரு பேரங்காடியில் 19 மாதக் குழந்தைய கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரு வெளிநாட்டு ஆடவர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இரவு 7.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், குழந்தை தனது தாய் மற்றும் அத்தையுடன் பல்பொருள் அங்காடியில் எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

அப்போது “இரண்டு ஆண்கள் பின்னால் வந்துள்ளனர், சந்தேக நபர்களில் ஒருவர் திடீரென குழந்தையைத் தூக்கியதால், தாய் அலறியடித்து தனது குழந்தையை பின்னால் இழுத்தார்.

அந்த தாயின் அலறல் சத்தத்தில் சுதாரித்துக்கொண்ட இரண்டு பேரும் தப்பிக்க முயன்றனர், ஆனால் பல்பொருள் அங்காடியில் இருந்த பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்,” என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட பின்னர் இரண்டு வெளிநாட்டவர்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

“குற்றவியல் சட்டம் பிரிவு 363 இன் படி விசாரணைக்கு உதவ இரண்டு சந்தேக நபர்களும் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here