அம்பாங்கில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

அம்பாங்:

இங்குள்ள தாமான் கெராமாட் பெர்மாயில் மோட்டார் சைக்கிள் திருடியதாக நம்பப்படும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 16 அன்று இரவு சுமார் 10 மணியளவில், தாமான் கெராமாட் பெர்மாயில் உள்ள தனது வீட்டிற்கு அருகில், 60 வயதுடைய நபர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

“இருப்பினும், மறுநாள் காலை 10 மணியளவில் அவர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்த வந்தபோது அது காணாமல் போயிருந்தது என்று, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முஹமட் அஸாம் இஸ்மாயில் கூறினார்.

“பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்தார்,” என்று அவர் நேற்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

அதனடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் மூலம், 38 மற்றும் 42 வயதுடைய இருவரை மார்ச் 21 அன்று இரவு 7.30 மணியளவில் ஜாலான் கோம்பாக் செத்தியாவில் கைது செய்ததாக அவர் கூறினார்.

அவர்களிடமிருந்து இரண்டு இயந்திரங்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் உடல் பாகங்கள் உட்பட பல மோட்டார் சைக்கிள் பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் “சந்தேக நபர்களில் ஒருவருக்கு பல முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தன,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here