தமிழ் சினிமா பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அவர்களில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்க இடம் பிடிப்பதுண்டு. இன்னும் சிலர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அபப்டிப்பட்டவர்களில் ஒருவர் தான் சின்ன கலைவாணர் விவேக், நகைச்சுவை நடிகராக பல்லாயிர கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இவரது நகைச்சுவைகள் பெரும்பாலும் மக்கள் சிரிக்கவைப்பதோடு சிந்திக்கவும் வைத்து. மூடநம்பிக்கைக்கு எதிராகவும், குழந்தை தொழிலை, தீண்டாமை, என பல விஷயங்களை தனது நகைச்சுவை மூலம் சிந்திக்க வைத்திருப்பவர் நடிகர் விவேக்.
திரை வாழக்கையில் மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் பலருக்கு உதாரணமாக விளங்கினார். சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அந்த வழியில் வாழ்ந்தும் காட்டினார். பல லட்ச மரங்களை நட்டு பிறக்கும் அதை பின்பற்ற முன்னோடியாக திகழ்ந்தார். இவரது சிந்தனையும் சிரிக்கவைக்கும் நகைச்சுவையும் இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று தந்தது. திரைவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் சிறந்து விளங்கிய நடிகர் விவேக் சில ஆண்டுகளுக்கு முன் தீடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார், இவரின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பானது. இந்த நிலையில், விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் (எ) வரன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் எளிய முறையில் நடந்தது முடிந்தது. மேலும், தந்தையின் கனவுபடியே நடிகர் விவேக்கின் மகள் மற்றும் மருமகன் இருவரும் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள், மூலிகை பூ செடிகள் நட்டுவைத்தனர். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினர்.