இரண்டே மாதங்களில் மெக்னம் ஜேக்போட் மூலம் புதிதாக நால்வர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். Magnum 4D Jackpot மூலம் இவர்களுக்கு மொத்தம் 22 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது.
வெற்றிபெற்ற எண்கள் இவர்களுக்குப் பல வழிகளில் கிடைத்திருக்கின்றன. நம் பிக்கை அடிப்படையில் இவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. எதிர்பார்க் காத மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை இது அவர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஈப்போவைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும் ரவாங்கைச் சேர்ந்த குடும்ப மாதும் காலஞ் சென்ற தங்கள் தாய்மார்களின் நினைவாக தங்களின் தாயார்களின் பிறந்த, ஆண் டுகளை வைத்து அதிர்ஷ்ட எண்களைத் தேர்வு செய்திருக்கின்றனர்.
இவர்கள் வாங்கிய 1933 -2023 ஆகிய எண்கள் ஜேக்போட் பரிசை வென்றன. கடந்த 2024 மார்ச் 17ஆம் தேதி இவர்கள் ஒவ்வொருவருக்கும் 4 மில்லியன் ரிங்கிட் ஜேக்போட் பரிசுத் தொகை கிடைத்தது.
என் தாயாரின் நினைவாக சிறந்த வழியில் பணத்தைச் செலவு செய்வேன் என்று ஈப்போவைச் சேர்ந்த அவர் கூறினார். சொர்க்கத்தில் இருந்தாலும் என் தாயார் என் குடும்பத்தின் மீது பாசத்தைச் செலுத்தி இருப்பதை உணர்கிறேன் என்று ரவாங்கைச் சேர்ந்த வெற்றியாளர் தெரிவித்தார்.
இதேபோல 2024 பிப்ரவரி 25ஆம் தேதி ஜோகூரைச் சேர்ந்த குடும்ப மாது 8.5 மில் லியன் ரிங்கிட் ஜேக்போட் தொகையை வென்றார். என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் பழைய ரசீது இருந்தது. 7 ஆண்டுகளுக்கு முன் பெற்ற அந்த ரசீது எண்கள் அதிர்ஷ் டத்தைத் தந்தன என்று அவர் சொன்னார்.
இதற்கிடையே சீனப் புத்தாண்டுக் காலத்தில் மலாக்காவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்றவர் 5.4 மில்லியன் ரிங்கிட் ஜேக்போட் பரிசை வென்றார். 2024 பிப்ரவரி 11ஆம் தேதி மலாக்கா, தாமான் ஸ்ரீ மங்கா மெக்னம் கடையில் இவர் வாங்கிய 7878 -1318 ஆகிய எண்கள் ஜேக்போட் பரிசை வென்றன.