கோலாலம்பூர்:
நாட்டில் மண்டையை பிளக்கும் வெயில் காரணமாக மக்கள் தொடர்ந்து அவதியுற்றுவரும் நிலையில், வெப்ப பக்கவாதம் காரணமாக இந்த வாரம் ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளது.
இதன்மூலம் வெப்பத்தாக்கம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
நட்மா வெளியிட்டுள்ள வெப்பத்தாக்கம் தொடர்பான வானிலை அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1 அன்று கிளந்தானில் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததாகவும், முன்னதாக கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பகாங்கில் 22 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலான கண்காணிப்பின் அடிப்படையில், வெப்பம் தொடர்பான நோய்களின் எண்ணிக்கை மொத்தம் 37 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெப்பப் பக்கவாதம் தொடர்பான 10 சம்பவங்கள் பதிவாகிய நிலையில், வெப்ப சோர்வால் 26 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.