மலேசியா-இந்தோனேசிய உறவை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோ கலந்துரையாடல்

கோலாலம்பூர்:

மீபத்தில் நடந்து முடிந்த இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரபோவோ சுபியாந்தோவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தோனேசியப் பேராளர் குழுவுடன் மலேசியாவுக்கு ஒரு நாள் சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள பிரபோவோ, மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து அன்வாருடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

“எங்கள் இருவரது அரசியல் வாழ்க்கைப் பாதைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. தலைமைப் பதவியை எட்டுவதற்கு முன்பு இருவரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம் என்றும், கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா பள்ளியில் பயின்றபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பிரபோவோ என்னிடம் பகிர்ந்துகொண்டார்,” என்றும் பிரதமர் அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் பிரபோவோவுக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here