மூன்று நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜப்பானைச் சென்றடைந்தார்.

நாளை நடைபெறவுள்ள Nikkei Forum 29th Future of Asia மாநாட்டில் பிரதமர் ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஜப்பானிய பிரதிநிதி ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

அத்தோடு அங்குள்ள சில பெரிய நிறுவனங்களின் வணிகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் என்றும் தோக்கியோவில் உள்ள கீயோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவர் வெள்ளிக்கிழமை மலேசியா திரும்புவார் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here