அவர்களெல்லாம் வெறும் ஒ.பன்னீர்செல்வம்தான்… நான் ஓஓ…பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “நான் சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.

அதன் பிறகு அந்த தொகுதியில் ஏகப்பட்ட பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். என்னை சேர்த்து இங்கு 5 பன்னீர்செல்வம் போட்டி போடுகிறார்கள். நான் தேர்தல் ஆணையத்திடம் என்னென்ன சின்னங்கள் கேட்டேனோ அதே சின்னங்களை தான் மற்ற பன்னீர்செல்வமும் கேட்டார்கள்.

அவர்களெல்லாம் வெறும் ஒ.பன்னீர்செல்வம்தான்… நான் ஓஓ…பன்னீர்செல்வம். ஒரு சின்னத்தை 2 பேர் கேட்டால் அதை குலுக்கல் முறையில் போட்டு தான் சின்னம் தேர்ந்தெடுப்பார்கள். அதில் நமது வெற்றி சின்னமான பலாப்பழம் சின்னம் நமக்கு கிடைத்தது” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here