சகோதரியை கத்தியால் குத்தியதாக லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான்:

கடந்த திங்கட்கிழமை, தனது வளர்ப்பு சகோதரியை காயப்படுத்தியதாக லோரி ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக தெலுக் இந்தான் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட எல். தியாகராஜ், 52, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி. அஷ்வினி முன்னிலையில் தமிழில் வாசிக்கப்பட்டதை அடுத்து, அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகளின்படி, காய்கறி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி தேவி (31) என்பவரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெலுக் இந்தானின் தாமான் முஹிப்பாவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றச் செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 326 A உடன் சேர்த்து படிக்கப்படுகின்றது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் .

இவ்வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரைப் பார்க்க முடியாது என்ற கூடுதல் நிபந்தனையுடன் ஒரு தனி நபர் ஜாமீன் மற்றும் RM3,000 பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும் மே மாதம் 9ஆம் தேதிக்கு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here