கோலா பெராங்:
உலு திரெங்கானுவில் உள்ள செகாயு நீர்வீழ்ச்சியில் விழுந்த தனது நண்பர் ஒருவரைக் காப்பாற்ற முயன்ற 25 வயது நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோல திரெங்கானுவின் பாடாங் ஹிலிரானைச் சேர்ந்த ஷாயாபிக் ஹைகல் ஷாருதின் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், அப்பகுதியி மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டபோது, நீர்விழ்சியில் தவறி விழுந்த தனது நண்பரைக் காப்பாற்ற முயன்றதாக நம்பப்படுகிறது.
நேற்றுக் காலை 11.18 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், நீர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட தீயணைப்பு இயந்திரம் என மொத்தம் 10 தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று, கோலா பெராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுல்ஹிஷாம் முகமட் யூசோப் கூறினார்.
“மதியம் 12.15 மணியளவில், நீர் மீட்புக் குழு உறுப்பினர்கள், அவர் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்தில் 1.5 மீட்டர் ஆழத்தில் இருந்த பாறைகளுக்கு இடையில் பாதிக்கப்பட்டவரைக் கண்டனர்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுல்ஹிஷாம் தெரிவித்தார்.