துளசி மாலை அணிவது ஏன்?

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.

விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன்.
ஐந்து தலைநாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன்.எனவே தான் கண்ணன் துளசி மாலை அணிந்து இருப்பான். வீடுகளின் பின் பக்கத்தில் துளசி மாடம் அமைப்பதும், இதனால் தான்.
பூச்சிகள் நுழையாமல் தடுக்க வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழி பட்டார்கள். தற்போதும் இந்த முறை பல வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணுவின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும். வீட்டின் தென் மேற்கு பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றிகோல மிட்டு வழிபட்டு வந்தால், நல்லது.
துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
துளசி தேவியின் வேறு பெயர்கள்
1. திருத்துழாய் (ஆண்டா ளுக்கு முதலில் இந்த பெயரே இருந்தது) 2. துளபம்,
3. துளவம், 4. சுகந்தா, 5. பிருந்தா, 6. வைஷ்ணவி. 7. லட்சுமி, 8. கவுரி,

9. மாதவி, 10. ஹரிபிரியா, 11. அம்ருதா, 12. சுரபி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here