சுப்மன் கில் உடன் திருமணம் – மனம்திறந்த நடிகை ரிதிமா பண்டிட்

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் தொலைகாட்சி பிரபலம் ரிதிமா பண்டிட் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. திருமணம் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று ரிதிமா பண்டிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இது சிலரது கற்பனை, என்றே நினைக்கிறேன். சிலர் கதைகளை உருவாக்குகின்றனர், அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு சுப்மன் கில் பற்றி எதுவும் தெரியாது.

இது மிகவும் அபத்தமானது. காலை முதலே எனக்கு வாழ்த்து குறுந்தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து எனக்கு சலித்துவிட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட முடிவு செய்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

இது குறித்த பதிவில், இன்று காலை முதலே எனக்கு நிறைய செய்தியாளர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர், இப்படி ஒரு விஷயம் நடைபெறவே இல்லை. பலருக்கு என் திருமணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றார்கள், ஆனால் யாருடன்? இல்லை இப்படி எதுவும் நடைபெறவில்லை. இப்போதைக்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here