கோலாலம்பூர்:
உணவு விஷத்தால் உயிரிழந்த 19 மாத சிறுமியின் ரத்த மாதிரிகள், ஆய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேதியியல் துறையின் அறிக்கைக்காக காவல்துறை காத்திருப்பதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
“விசாரணைக்கு உதவுவதற்காக, கேட்டரிங் நடத்துபவர், பள்ளி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உட்பட எட்டு பேரிடம் போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
“இது இப்போது வேதியியல் துறையை பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றிலிருந்து முடிவுகளைப் பெறுவதற்கும் சார்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.
























