* தீராத பிரச்சனைகள், தொழிலில் வளர்ச்சி தடை நீங்க சனிக்கிழமைகளில் வஸ்திர தானம் செய்வது சிறந்தது.
* சனிக்கிழமையில் காகத்துக்கு உணவளிப்பது மிகவும் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. இதனால் சனி தோஷம் நீங்கும்.
* சனிக்கிழமைகளில் முழுமுதற் கடவுளான விநாயகரை தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்வதால் தடைகள் அனைத்தும் நீங்கி விடும்.
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
* தொழில் முடக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் கோயிலுக்கு நல்லெண்ணையை தானம் செய்வது சிறந்தது.
* சனிக்கிழமை அன்று பறவைகளுக்கு தண்ணீரும், தானியமும் வழங்குவது முன்ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்.
























