உலுதிராம் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து காவல் நிலையத்தின் முன் கதவுகள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும்

ஜோகூர் உலு திராம் காவல் நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் முன் கதவுகள் இரவு 10 மணி முதல் மூடப்படும் என்று டத்தோஸ்ரீ சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகள் மற்றும் பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.

உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, காவல்துறையின் உடனடி நடவடிக்கையானது நிர்வாக உத்தரவுகளின் கீழ் அனைத்து மாவட்ட காவல்துறை தலைமையக (IPD) பகுதிகள், காவல் நிலையங்கள் மற்றும் முக்கிய காவல் வளாகங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடுமையாக்குவதாகும். இதே சிக்கலைத் தொடர்ந்து, போலீஸ் படைத்தலைவரின் நிரந்தர உத்தரவின் படி 10 மணிக்குப் பிறகு அனைத்து காவல் நிலையங்கள் மூடப்படும்.

பொதுமக்கள் புகார் அளிக்கும் இடமாக காவல் நிலையத்தின் பங்கை நாம் சமநிலைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் காவல் நிலையங்களும் கலவரத்தின் இலக்குகளாக உள்ளன. எனவே, நாம் இரண்டையும் சமப்படுத்த வேண்டும்  என்று டத்தோஸ்ரீ ரிச்சர்ட்  (ஜிபிஎஸ் – செரியன்) துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் சமீபத்தில் உலு திராம் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பைக் கடுமையாக்க எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

மே 17 அன்று உலு திராம் காவல் நிலைய தாக்குதலில், கான்ஸ்டபிள் அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அசார் 22, மற்றும் கான்ஸ்டபிள் முஹமட் சயாபிக் அஹ்மத் சைட், 24, ஆகிய இரு காவலர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு போலீஸ் அதிகாரி, கார்ப்ரல் முகமட் ஹசிஃப் ரோஸ்லான் 38, தோள்பட்டை மற்றும் இடுப்பில் இரண்டு துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here