இரவு தூங்க செல்லும் முன் இந்த மந்திரங்களை சொல்லுங்க

தூக்கத்தில் அனைவருக்கும் தினமும் பலவிதமான கனவுகள் வருவது யதார்த்தமான ஒன்று. ஆனால் சிலருக்கு தினமும் பலவிதமான கனவுகள் வந்து தூங்க விடாமல் பலவிதமான பிரச்சனைகளை உருவாக்கும். இவற்றில் கெட்ட கனவுகள் அதிகம் வருவதால் அது நிஜமாக நடந்து விடுமோ என்ற பயமோ பலரை நிம்மதி இழக்க செய்யும். இதனால் மனஅழுத்தம், கவலை, மன அமைதி இழக்க செய்வத ஆகிய விளைவுகள் ஏற்படும். இது போன்ற கெட்ட கனவுகளில் இருந்து விடுபட தினமும் தூங்கச் செல்வதற்கு முன் சில மந்திரங்களை தொடர்ந்து பாராயணம் செய்து வருவது நல்ல பலனை தரும்.

பல விதமான காரணங்களால் இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், கெட்ட கனவுகளால் பலவிதமான பிரச்சனைகளை தவிப்பவர்கள், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சில மந்திரங்களை தினமும் தூங்க செல்வதற்கு முன் இரவில் சொல்லி வந்தால் மனதில் அமைதி ஏற்படும். மன அழுத்தம் குறையும். மனதை தூய்மை செய்வது, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

1. ஓம் மனி பத்மே ஹம் – இந்த புத்த மந்திரம் மனதையும், உடலையும் அமைதிப்படுத்தக் கூடியதாகும். இந்த மந்திரத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் 7 முதல் 11 முறை சொல்வது நல்ல பலனை தரும்.

2. காயத்ரி மந்திரம் – மிகவும் சக்தி வாய்ந்த, பழமையான வேத மந்திரமான காயத்ரி மந்திரத்தை தினமும் இரவில் 3 முதல் 5 முறை சொல்லி வந்தால் மன அமைதி கிடைக்கும். கவலைகள், மன அழுத்தம் குறையும்.

3. மகாமிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரியம்பகம் என துவங்கும் அதிசக்தி வாய்ந்த மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். அளவில்லாத நன்மைகள் கிடைக்கும். தூங்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தை 5 முதல் 7 முறை தொல்வதால் கெட்ட கனவுகள் இல்லாத நல்ல தூக்கம் கிடைக்கும்.

4. ஓம் சாந்தி சாந்தி சாந்தி – மிக எளிமையான இந்த மந்திரத்தை தூங்கச் செல்வதற்கு முன் சொல்லி வந்தால் மனம் அமைதி பெற நல்ல பலன் கிடைக்கும். இது மன அமைதி தரும் மந்திரமாகும். 3 முதல் 5 முறை வரை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் மன அமைதி அடைவதை உணர முடியும். இந்த மந்திரத்தின் அதிர்வலை மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும்.

5. ஓம் தும் துர்கையே நமஹ – என்ற சக்திவாய்ந்த துர்கா மந்திரத்தை சொல்லி வந்தால் துர்கா தேவியின் அருளும் பாதுகாப்பும் கிடைக்கும். இரவில் 5 முதல் 7 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் துர்கையின் அருளால் கெட்ட கனவுகள், எதிர்மறைகள் சக்திகள் நீங்கும்.

6. ஓம் டட் சட் – இது பிரபஞ்சத்தையும் நம்மையும் இணைக்கும் மந்திரமாகும். இது ஆன்மிக வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். இது உடல் மற்றும் மனதை சீராக்கும். மன அழுத்தம் ஏற்படுவதை குறைத்து, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். இந்த மந்திரத்தை 3 முதல் 5 முறை சொல்வது சிறந்தது.

7. ஓம் சர்வே பத்ரனி பாஷ்யந்து என்ற ரக்ஷ மந்திரத்தை சொல்லி வந்தால் எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இரவில் 5 முதல் 7 முறை இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பு. இது பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, நமக்கு நிம்மதி உணர்வை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here