மலேசிய ஊடக மன்ற சட்டமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதற்கு அமைச்சரவை நேற்று இணக்கம் தெரிவித்தது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார். அடுத்த வாரம் முதல் வாசிப்புக்காக அந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

விவாதம் நடத்துவதற்கு நேரம் இருந்தால் இரண்டாவது வாசிப்புக்காகவும் அது தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் செய்தி ஊடகத்துறையை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மலேசிய ஊடக மன்றம் அமைக்கப்படவுள்ளது. பொறுப்பான முறையில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை உறுதிப்படுத்தவும் இது வகை செய்யும்.





















