டில்லி நோக்கி விவசாயிகள் பேரணி: தடுப்பை மீறியவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

புதுடில்லி :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மற்றும் விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் டில்லி முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

டில்லிக்குள் நுழையாமல் இருக்க பஞ்சாப், ஹரியானா டில்லி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பு எல்லையில் போலீசார் அமைத்த தடுப்புகளை உடைத்து முன்னேற சிலர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை வீசி விரட்டினர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here